இத்தகைய உணவுகளை, தொடர்ந்து நாம் உட்கொள்ளும் போது,எமது உடல் அசுத்தமடைகிறது.எனவே நமது உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றி, நோய் தொற்றுக்களின் அபாயத்தை குறைக்க எமது உடல் முழுவதையும் சுத்தம் செய்வது மிக அவசியமாகும்.
எனவே உங்கள் உடலை வெறும் மூன்றே நாட்களில் சுத்தம் செய்வதற்கான எளிய வழிமுறைகளை இனி நீங்களும் தெரிந்து கொள்ளலாம்.முதலில் உங்கள் உடலை சுத்தம் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்னர், எவ்வித பால் பொருட்களையும் உண்ணக்கூடாது.காரணம் பால் பொருட்கள் செரிமானத்தை தாமதப்படும்.
உடலை சுத்தம் செய்வதற்காக, முதல் நாள், காலைநேர உணவிற்கு முன்னர் 1/2 டம்ளர் நீரில், 2 எலுமிச்சை பழங்களை சாறு பிழிந்து பருக வேண்டும்.
காலை உணவை உண்ட பின்னர் 1 1/2 டம்ளர் அன்னாசிப்பழத்தை சாறாக பிழிந்து பருக வேண்டும். குடிக்க வேண்டும். இப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், எமது சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதுகாக்கும்.காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு இடைப்பட்ட நேரத்தில், 1 1/2 டம்ளர் கேரட் பானத்தை குடிக்க வேண்டும். ஏனெனில் இது சுவாச பாதையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மதிய உணவு வேளையில் 1 1/2 டம்ளர் வாழைப்பழம், அவகேடோ, பீட்ரூட் என்பவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பணத்தை குடிக்க வேண்டும். இவற்றிலுள்ள பொட்டாசிய சத்துக்கள் எமது உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. இரவு உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் 1 டம்ளர் இஞ்சி, புதினா ஆகியவற்றை கொண்டு தேநீர் தயாரித்து பருக வேண்டும். இது எமக்கு சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.இரவில் உறக்கத்திற்கு முன்னர், 340 கிராம் கிரான்பெர்ரி பானத்தை பருக வேண்டும். இப்பானம் நுரையீரலில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, தொற்றுகளின் தாக்கத்தில் இருந்து முற்றாக தடுக்கிறது.