அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ-ஆனது பொதுமக்கள் வீட்டில் உள்ள டி.வி மற்றும் மொபைல்கள் மூலம் உளவு வேலை பார்ப்பதாக விக்கிலீக்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டது. ஆனால், இதற்கு சி.ஐ.ஏ சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , சி.ஐ.ஏ பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் பழையவை ஆக இருப்பதாக கருதுவதாகவும், அதை இன்னும் மேம்படுத்த விரும்புவதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசெர் தெரிவித்துள்ளார்.
அதாவது சி.ஐ.ஏ பயன்படுத்தும் ரகசிய தொழில்நுட்பத்தை விக்கிலீக்ஸ் போன்ற ஊடக நிறுவனங்கள் கண்டறிந்து விடுவதால், யாரும் கண்டறிய முடியாத வகையிலான தொழில்நுட்பத்தை சி.ஐ.ஏ பயன்படுத்த வேண்டும் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.