பொதுவாக பள்ளிக்கு விடுமுறை எடுக்க விரும்பும் மாணவர்கள் ஆங்கிலத்திலேயே கடிதங்களை எழுதுவது வழக்கம். தமிழில் எழுதுவது மிகக் குறைவு, அதேபோல் உண்மையை எழுதுவது மிக அரிது
ஆனால் இந்த மாணவர் தனது ஆசிரியருக்கு எழுதியிருக்கும் கடிதம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் அரசு பள்ளியொன்றில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவன் ஈஸ்வரன் , தனது ஆசிரியருக்கு விடுமுறை கடிதம் எழுதியிருந்தான். அந்த கடித்தை பிரித்து படித்து பார்த்த ஆசிரியர் நெகிழ்ந்து விட்டார். காரணம் அந்த மாணவர் விடுப்புக்காண உண்மை காரணத்தை அந்த கடித்ததில் எழுதியிருந்தான்.
அந்த மாணவனின் கடித்ததில் ," என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கால்நடைகளை பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று ஈஸ்வரன் என்ற அந்த மாணவன் எழுதியிருந்தான்.
இந்த கடித்தின் மூலம் அந்த மாணவனின் நேர்மையும் , கால் நடைகள் மீது அவன் வைத்திருக்கும் பற்றும் புலனாகி இருக்கிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சமூகம் கால்நடைகளுக்கு எவ்வளவு முக்கியதுவம் அளிக்கிறது என்பதை அந்த மாணவனின் கடிதம் மூலம் அறிந்து கொள்ளலாம். தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.