Bike accident causes couples death - திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன் வந்த எமன்: காதல் ஜோடியின் பரிதாபம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
28,215 Views
திருமணம் செய்வதற்கு சில நாட்களே இருந்த நிலையில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இளம் காதல் ஜோடி ஒன்று, உந்துருளி விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் பெலவத்தை கோரகதுவ பிரதேசத்தை சேர்ந்த ஜனக என்ற இளைஞரும் கும்பதுவ பிரதேசத்தை சேர்ந்த சகுரா என்ற யுவதியும் என தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி தனியார் வகுப்பொன்றுக்கு சென்று தனது காதலனுடன் மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
மீகாஹதென்ன அகலவத்தை பாதையில் கோக்கும்புர பிரதேசத்தில் எதிர் திசையில் வந்த பாரவூர்தியில் இவர்கள் பயணித்த உந்துருளி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், யுவதி நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மீகாஹதென்ன காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.