அழகுக்கலை கடையில் நின்ற மனைவியை அவரது கணவன் கோடாரியால் வெட்டியதால் படுகாயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன் யாழ்ப்பாணம் கல்வியங்காடு 03 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி என்பவரே இக் கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த பெண் திருநெல்வேலி சந்தியில் உள்ள அழகுபடுத்தல் நிலையத்தில் நின்ற போது திடிரென உட்புகுந்த அவரது கணவன் குறித்த பெண்ணை கோடாரியால் வெட்டி தப்பி சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் மனைவியின் தகாத உறவின் காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கோப்பாய் பொலிஸார் குறிப்பிட்டனர்.