நடிகை கஸ்தூரி அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பெயரில் நடிகர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர் எனப் புகார் கூறியிருந்தார்.
பின்னர் நான் அப்படி சொல்லவே இல்லை என அவரே விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமா துறையில் அப்படி நடப்பதாக நான் சொல்லவில்லை.
ஒரு நடிகையாக சினிமா துறையில் விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் பிரச்சினைகளை சந்தித்துள்ளேன்.
ஆனால் என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் சினிமா துறையில் இல்லாத பணக்காரர்கள், தொழிலதிபர்கள் தான். தங்களிடம் உள்ள பணத்தை வைத்து ஒரு நடிகையை வாங்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
நடிகை என்றால் அப்படிதான் என தினம் வரும் வதந்திகளும் அதற்கு காரணமாகி விடுகிறது என தெரிவித்துள்ளார்.