car-racer - கார் பந்தய வீரர் மற்றும் அவரது மனைவி கொடூரமாக உயிரிழந்த சம்பவம்!! நடந்தது என்ன? திக் திக் தகவல்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
29,564 Views
சென்னை அருகே கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரின் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதன் பின்னணி குறித்து பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய சொகுசு கார் தீப்பற்றியதன் பின்னணியில் தொழில் போட்டி அல்லது முன்விரோதம் இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே வேகமாக வந்த சொகுசு கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தரும், அவரது மனைவி நிவேதாவும் மரணமடைந்தனர்.
2 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற அஸ்வின் சுந்தருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி திருமணம் ஆனது.
தொழில் முறை கார் பந்தய வீரரான அஸ்வின் நேற்றிரவு இரவு உணவுக்காக சொகுசு காரான பிஎம்டபியூ காரில் தன் மனைவியுடன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.