பிரபல பொலிவுட் ஆக்ஷன் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னாவும் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காரில் சென்றபோது என் போனில் வந்த மெசேஜால் நான் அழுதுவிட்டேன்.
ஒரு பணக்கார, அதிகாரம் படைத்த கிளையன்ட் பல மாதங்களாக எனக்கு தொல்லை கொடுத்தார்.
அவர் எதற்காக அப்படி செய்கிறார் என்பது தெரிந்தும் தெரியாதது போன்று நடித்தேன்.
எனெனில் எனக்கு என் வேலை மட்டும் செய்ய பிடிக்கும். இந்திய தேசிய பார் அசோசியேஷன் நடத்திய கருத்துக்கணிப்பின்படி பணியிடத்தில் 38 சதவீத பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள், அதில் நானும் ஒருத்தி.
ஒரு நடிகரின் மனைவிக்கு இப்படி என்றால் சாதாரண பெண்களின் நிலைமை நினைத்தால் பயமாக உள்ளது என ட்விங்கிள் தெரிவித்துள்ளார்.