அட்டக்கத்தி படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்த நந்திதா தற்போது சீனு ராமசாமியின் இயக்கத்தில் இடம்பொருள் ஏவல், ராதாமோகன் இயக்கத்தில் உப்புக்கருவாடு, விமலுக்கு ஜோடியாக அஞ்சல, மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியா பெயரிடப்படாத ஓர் படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
தனது நடிப்புத் திறனை வெளிகாட்டும் விதமான படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று உறுதியாகவுள்ள நந்திதா நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புகொள்கிறார்.
இந்நிலையில் சிலர் தங்களை நந்திதாவின் மேனேஜர் என்று கூறி தயாரிப்பு நிறுவங்களிடம் பேசி வருகின்றனர் என்பதை தனது நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்ட நந்திதா சற்று கோபமடைந்துள்ளதோடு இப்படி சிலர் செய்வது தனது வளர்ச்சிக்கு தடையாகுமே என எண்ணி தனக்கென தனியாக மேனஜர் என்று யாருமே கிடையாது என்றும், தனது கால்ஷீட் விவரங்களை தனது பெற்றோர்தான் கவனித்துவருவதாகவும், தனது மேனேஜர் எனக்கூறிக் கொண்டு யாராவது தயாரிப்பாளர்களிடன் அணுகினால் அவர்களை நம்பவேண்டாமென்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-கோடம்பாக்கக் குருவி-