Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
01
“ப்ரியா ஆனந்த் கதை கேட்கும் லட்சணம்!”

how priya anand will hear story from directors - “ப்ரியா ஆனந்த் கதை கேட்கும் லட்சணம்!”Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,090 Views
எதிர்நீச்சல் தவிர ப்ரியா ஆனந்த் நடித்து ஒரு படமும் ஓடவில்லை. இருந்தாலும் இருக்கிற ஹீரோயின் பஞ்சத்தில் இதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர். அவ்வளவு நெருக்கடிக்கு நடுவிலும் இவருக்கு படங்கள் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுப்பதேயில்லை அவர். எதிர் நீச்சல் ஹிட் ஆன பிறகு சம்பளத்தை ஏற்றினார் அல்லவா? அதே சம்பளத்தைதான் தோல்விகளுக்கு பிறகும் நிலைநாட்டி வருகிறது அவரது கெத்து. 

சப்போர்ட்டுக்கு குச்சியை நட்ட மாதிரி இவருக்கு இன்னும் ஒரு ப்ளஸ். விரைவில் வெளிவரவிருக்கும் வை ராஜா வை படம் ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லட்சங்களை கேட்டால் கோடிகளை கொட்டக் கூடிய நிறுவனம் அது. அதனால் பட்ஜெட்டிலும் சரி, நடிகர் நடிகைகளின் சம்பளத்திலும் சரி, எவ்வித குறையும் வைக்கவில்லை அந்நிறுவனம்.


சரி, மெயின் மேட்டருக்கு வருவோம். கடந்த பல படங்களாகவே இவர் யார் யாருடன் நடித்தாலும் ஒருவரோடு மட்டும் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்தி வருவதாக கூறி வந்தார்கள். அந்த ஒருவர், அதர்வா. ஒருகட்டத்தில் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவே கோடம்பாக்கத்தில் செய்திகள் பலமாக அடிபட்டது. 


முரளியின் மீது அன்பு கொண்ட சில பழைய தயாரிப்பாளர்கள் நேரடியாக அதர்வா வீட்டுக்கே போய், தம்பி... இது சினிமா. நிறைய வெளிச்சங்கள் படும். ஆனால் அதையே நிரந்தரமா வேணும்னு நினைச்சா எதிர்காலம் சரியா இருக்காது. புரிஞ்சுக்கோ என்றெல்லாம் பாடம் எடுத்திருந்தார்கள். அதற்கப்புறம் வெளியிடங்களில் சுற்றுவதை அதர்வா குறைத்துக் கொண்டார். மெல்ல மெல்ல அந்த கிசுகிசுவும் நீர்த்துப்போனது. 



இப்போது என்ன நடக்கிறது? அண்மையில் ப்ரியா ஆனந்தை சந்தித்து கதை சொல்ல முன் அனுமதி கேட்டிருந்தார் ஒரு புதிய இயக்குனர். வாங்க என்று வரச்சொன்னார் அவரும். போன இடத்தில்தான் ஷாக். சொல்லுங்க என்று இவர் முன் உட்கார்ந்தது ப்ரியா ஆனந்த் அல்ல. கவுதம் கார்த்திக். அவருக்கு கதை சொல்ல அனுமதி கேட்டால், இவர் குறுக்கே வர்றாரே... என்று குழம்பிப் போன இயக்குனர், தப்பான முகவரிக்கு வந்துட்டமோ என்று பதற, சரியான இடத்துக்குதான் வந்திருக்கீங்க, கதைய சொல்லுங்க என்றாராம் அவர். 

 

இப்போதெல்லாம் ப்ரியாவுக்காக நான்தான் கதை கேட்கிறேன். நான்தான் சம்பளத்தையும் முடிவு பண்ணுவேன் என்று இவர் சொல்வதை பார்த்தால், கூட்டுல இருக்கிற சிங்கிள் குருவி மட்டுமல்ல என்பது நன்றாகவே புரிந்ததாம் அவருக்கு. இயக்குனருக்கு புரிந்தது இந்த ஊருக்கு புரிய எவ்வளவு நாள் ஆகும்?
=== CASTRO RAHUL ===

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top