வெள்ளை மாளிகைக்கு சீல் .
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மாளிகையில் மர்ம பொருள் கிடந்ததையடுத்து அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே மர்ம பொருள் கிடந்ததை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் மர்ம பொருளை கைப்பற்றி சென்றனர். மேலும் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவைரயும் பிடித்து சென்றனர். அவரிடம் ரகசிய இடத்த விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே அதிபர் ஒருவர் மாளிகைக்குள் இருக்கும் போதே, வெள்ளை மாளிகைக்கு அதிகாரிகள் சீல் வைத்தது இதுவே முதல் முறை.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த வருகிறார். அதனால் ட்ரம்பிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் கைப்பற்றப்பட்ட மர்ம பொருள் குறித்து எவ்வித தகவலும் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை