கொடூரமான எண்ணம்! என்பது ஒருபோதும் தம்பதிகளிடம் இருப்பது பேராபத்தை விளைவிக்கும். மனைவியிடம் கொடூரமான எண்ணம் வெளிப்படும் போதுதான் ஆண்கள் அதிகம் அச்சம் கொள்கின்றனர். இதை தனிமனித இயல்பு கோளாறு என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது போன்ற நிலைப்பாடு மனைவிமார் மத்தியில் வெளிப்படும் போதும் கணவன்மார்கள் பெரும் அச்சம் கொள்கின்றனர். இது ஆண்களுக்கும் பொருந்தும்.
மனைவி அதிகளவில் தமது பிரச்சனைகள் கூறும் போது, அவர்கள் மீது அச்சம் ஏற்படுகிறது. அது ஆரோக்கியம், பொது என எந்த வகையாக கூட இருக்கலாம். ஆண்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்சினையை வெளிகூறி அழமாட்டார்கள். தமது மனதுள்ளேயே வைத்துக்கொள்வார்கள். இதுசார்ந்த அச்சத்தை ஆண்கள் நண்பர்களிடம் கூட பகிர்ந்துக் கொள்வது மிக குறைவாகும்.
கணவன் - மனைவிக்கிடையில், ஒருவர் அதிகமாக ஆத்திரமடையும் போது, மற்றொருவர் அதிக மன அழுத்தம், பதற்றம் அடைவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், இவர்களது உடலில் கூட அதிக இரசாயன மாற்றங்கள் உண்டாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சமயங்களில் கணவன் அல்லது மனைவி உறவு பிரிந்துவிடக் கூடாது, பெயர் கெட்டுவிடும் என்பதற்காக விருப்பமில்லாத உறவில் பல தம்பதிகள் இணைந்திருப்பார்கள். இதனால் அந்த உறவில் தொடர்ந்து இருக்கும் துணைக்கு, மன அழுத்தம், மன சோர்வு, தயக்கம் போன்ற தாக்கங்கள் காரணமாக பல பிரச்சனைகளை சந்திப்பதாக கூறப்படுகிறது.
உங்கள் உறவில் ஏற்படும் அச்சம் அல்லது சண்டைகள் உண்டாவதற்கான காரணத்தை கண்டறிந்து, அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை முதலில் பின்பற்ற வேண்டும்.
உங்களால் அதற்கான தீர்வை பெற முடியவில்லையா? உங்கள் நெருங்கிய நண்பர்கள்,உங்கள் மீது அதிக அக்கறை கொண்ட உறவினர்களிடம் உதவி நாடுங்கள்.அல்லது சிறந்த மனவள ஆலோசகரிடம் முறையான ஆலோசனை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உடல் மட்டுமல்ல, மனதும் ஆரோக்கியமாக இருந்தால் தான் உறவும், வாழ்க்கையும் ஆரோக்கியமாக இருக்கும்.