மின்னஞ்சலை கண்டுபிடித்த அமெரிக்க வாழ் தமிழரான சிவா ஐயாத்துரை, அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.
அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையின் சில இடங்களுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் இ-மெயிலை கண்டுபிடித்த அமெரிக்க வாழ் தமிழர் சிவா ஐயாத்துரை, மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் சைட்டோசால்வ் எனும் நிறுவனத்தின் தலைவராகவும், சி.இ.ஓ.,வாகவும் இவர் உள்ளார்.