தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் பதவிகளை நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் கைப்பற்றியுள்ளனர்.
தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
இந்த தேர்தலில் ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் தற்போது ஒரே அணியாக சேர்ந்துள்ளனர். எனவே விஷால் அணி, கேயார் அணி, ராதாகிருஷ்ணன் அணி ஆகிய 3 அணிகள் இந்த தேர்தலில் போட்டியிட்டன.
இதற்கான ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், டி.ராஜேந்தர், சத்யராஜ், விஷால், இயக்குநர் சுந்தர்.சி, பாண்டிராஜ், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, ராதிகா சரத்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
கடந்த வருடம் இடம்பெற்ற நடிகர் சங்க தேர்தலிலும் விஷால் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.