நுளம்புக்கடியிலிருந்து இனி பாதுகாப்புதான்.
பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது. அவர்களது 2016-ஆம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்களில் ஒன்றுதான், நுளம்புக்கடியைத் தடுக்கும் கொசுவலை படுக்கை ஆராய்ச்சி.
இப்போது, புதிய அச்சுறுத்தல் ஒன்று உருவாகியிருக்கிறது. பூச்சி மருந்து எதிர்ப்பு சக்தி, நுளம்புகளிடம் அதிகரித்து வருகிறது. நுளம்பு எதிர்ப்பு மருந்துகளில் ரசாயனப் பயன்பாடு அதிகரித்து வருவதே அதற்குக் காரணமாக உள்ளது. நுளம்புகளிடையே பூச்சிமருந்து எதிர்ப்பு சக்தி, 60 நாடுகளில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மேற்கு மற்றும் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் அச்சுறுத்தும் அளவுக்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நுளம்பு வலையைச் சுற்றி நுளம்புகள் பறக்கும் பாதையை ஆய்வு செய்ய, அகச்சிவப்பு கேமராக்களைப் பயன்படுத்துகிறோம். நுளம்புகளின் செயற்பாடுகளை இவ்வளவு பெரிய அளவில் வீடியோ பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறை'' என்று லிவர்பூல் வெப்பமண்டல மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர் ஜோஸி ஸ்கேல் தெரிவித்தார்.
"நுளம்பு வலைகள், ஒரு தடுப்பை ஏற்படுத்துகின்றன. தன் மீது வந்து அமரும் நுளம்புகளை அந்த வலைகள் கொல்லாவிட்டால், அந்த நுளம்புகள் தொடர்ந்து வெளியில் காத்திருந்து, நீங்கள் விழித்தவுடன் கடிக்கும்".
மேலும் திறன் படைத்த புதிய நுளம்புவலைகள் , இழைகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை உருவாக்குதல் போன்றவற்றுக்கு ஆய்வு வழிவகுக்கும். இதன் மூலம், சிறு முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்க முடியும்.