மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
கணவனின் சந்தேக புத்தியால் ஒரே ஆண்டில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்தில் முடிந்தது.
இந்நிலையில் தன்னுடைய அனுமதியின்றி தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
மனைவியின் தொலைபேசியில் மேல்வேர் என்ற சாப்ட்வேரை இணைத்து அவருக்கு வரும் அழைப்புகளை ஒட்டு கேட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் இருந்து 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மேலும் 43(A), (b), 66(c) மற்றும் 72 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையிட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால் 5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.