எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத் தில் பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, பாகுபலி படத்தின் 2-ம் பாகம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.120 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் ராணா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, ரோஹினி உட்பட பலர் நடித் துள்ளனர்.
இதற்கான பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள , சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளி யிடப்பட்டது. இதற்கு ரசிகர் களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, இந்த திரைப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 28-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை அதிக அளவிலான தியேட்டர்களில் திரையிட திட்டமிடப்பட்டது. அதன்படி உலகம் முழுவதும் 7,500 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 6,500 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது
முதல் பாகத்திலேயே அதிக வசூலை அள்ளிய இத்திரைப்படம், இரண்டாவது பாகத்திலும் அதிக வசூலை அள்ளிக் குவிக்கும் என தெலுங்கு திரையுலகம் எதிர்பார்க்கிறது.