கிரிக்கெட் போட்டியொன்றில் வெற்றி பெற்ற பணத்தை தராததால் ஏற்பட்ட தகராறில் 12 வயது சிறுவன் அடித்து கொல்லப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள தஸ்பரா பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பந்தைய தொகையாக ரூ.250 வைத்து கிரிக்கெட் விளையாடி உள்ளனர். இதில் வெற்றி பெற்ற சிறுவனுக்கு தோல்வி அடைந்த சிறுவன் பணம் தராததால் இருவரிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த சம்பவம் நடைபெற்ற சில தினங்களிலே வெற்றி பெற்ற சிறுவன் கொலை செய்யப்பட்டான். கொலையான சிறுவனின் உடல் கடந்த சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் தகராறில் ஈடுபட்ட அந்த சிறுவன் தான் கொலை செய்தது தெரியவந்தது. குற்றச்சாட்ட சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை கூறுகையில், “என் மகன் வெற்றி பெற்ற பணத்தை திருப்பி தர அவன் மறுத்துவிட்டான்.
பின்னர் என்னுடைய மகனை அருகில் உள்ள தோட்டத்திற்கு அவன் அழைத்துச் சென்றான். அங்கு என் மகனை கடுமையாக தாக்கியதோடு, செங்கற்கலால் அடித்துள்ளான். இதில் என்னுடைய மகன் சுயநினைவை இழந்துவிட்டான். பின்னர் மூச்சை நிறுத்திவிட்டான்” என்றார்.
கொலையான சிறுவனின் உடலை மறைப்பதற்காக, அருகில் உள்ள காட்டுக்கு கொண்டு சென்று புதர்கள் மற்றும் செங்கற்களால் மூடியுள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் மற்றும் அவனது நண்பர்களை வரவழைத்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.