இதனை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் தனா இயக்கத்தில், படைவீரன் படத்தில் பாரதிராஜாவுடன் நடித்து வரும் விஜய், அந்த படம் பற்றியும், தன்னைப் பற்றியும் மனம் திறந்துள்ளார்.
சொந்தங்களுக்குக்கிடையில் உள்ள உறவையும், உணர்வையும் சேர்த்து, படைவீரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தேனிக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஒரு தலைவன், அவனுக்கு அருகில் இருக்கும் நபர்கள், இதைச் சுற்றி நடப்பது தான், இந்த படத்தின் கதை. படத்தில் எனது பெயர் முனி.
வெறுமனே இசைத்துறையில் மட்டும் எனது பயணத்தை தொடராது, திரையுலகில் ஓர் சிறந்த நடிகனாகவும் எனது முத்திரையை பதிக்க நான் அதிக ஆர்வமாகவுள்ளேன்.
என் மனதை கவர்ந்த நடிகைகளில் த்ரிஷாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல இடமுண்டு. இவ்விருவரும் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள். அத்துடன் ஐஸ்வர்யா ராய் நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை பிடிக்கும் என கூறியதற்கே, உங்கள் முக பாவம் மாறிவிட்டது. அவருடன் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளது என்றால், என்னை எப்படி பார்ப்பீங்கன்னு தெரியும். எனக்கு, த்ரிஷா போதுங்க. என விஜய் யேசுதாஸ் கூறியுள்ளார்.