திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தை உலகம் முழுக்க வெளியிடப் போவது உதயநிதியின் ரெட் ஜயன்ட் மூவிஸ் நிறுவனம். இவ்வளவு இருந்தும், விஜய் சேதுபதிக்கு சம்பளம் பெருமளவு செட்டில் செய்யப்படாமல் இருக்கிறதாம்.
அடுத்த மாதத்தில் படத்தை வெளியிடப் போகிறார்கள். இறுதி கட்டத்தில் இருக்கிறது வேலைகள். அதனால் கடந்த சில நாட்களாகவே விஜய் சேதுபதியை டப்பிங் பேசுவதற்காக அழைக்கிறார்களாம்.
‘கண்டிப்பா வர்றேன். ஆனால் மனிதாபிமானத்தோட நடப்பதற்கு நீங்களும் முன் வரணும் இல்லையா? என் சம்பளத்தில் அட்லீஸ்ட் பத்து லட்சமாவது கொடுங்க. வர்றேன்’ என்கிறாராம் விஜய் சேதுபதி.
வேறொரு ஹீரோவா இருந்தா, முழுசா எண்ணி வைங்க. வர்றேன் என்பார். இவர் கேட்பதோ அவருக்கு தருவதாக சொன்ன சம்பளத்தில் பல மடங்கு குறைவுதான். இருந்தாலும் கொடுக்க முடியலையே நிலைமை கம்பெனிக்கு. பணம் வாங்கிக் கொண்டு பேசுவாரா? அல்லது வாங்காமலேயே பேசுவாரா?