பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது.
மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் படம் வெளியாகியுள்ளது. படம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
நிலமை இவ்வாறு இருக்க படத்தின் பிரத்தியேக காட்சியொன்றில் படத்தின் முதல் பகுதி திரையிடப்படாமல் இரண்டாம் பகுதி முதலில் திரையிடப்பட்ட குளறுபடியொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின், பெங்களூரில் உள்ள திரையரங்கமொன்றிலேயே இத்தவறு இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
படத்தின் கிளைமேக்ஷின் போதே உண்மை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து படத்தை மீண்டும் முதலில் இருந்து திரையிட பார்வையாளர்கள் திரையரங்க முகாமைத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து முதலில் இருந்து படம் முழுமையாக திரையிடப்பட்டுள்ளது. இதனால் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.