ஆங்கிலமாக இருந்தாலும், தமிழில் இன்று கோலோச்சும் நடிகையாக விளங்குகின்றவர் நடிகை எமி ஜாக்சன். மதராசப்பட்டிணத்தில் தமிழுக்கு வந்து, அழகு நடிப்பால் தனக்கென இரசிகர்களை அள்ளிக் கொண்டவர் அம்மணி. இப்பொழுது, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகி. பல படங்களை கைவசம் வைத்துள்ளவர்களுள் ஐவரும் ஒருவர்.
அண்மையில், சூர்யாவின் மாஸ் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர், தன்னை விட நயன்தாராவுக்கு முக்கியத்துவம் உள்ளபடியினால், தானாக படத்திலிருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில், மீண்டும் இதே நிலை அம்மணிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், சுதாகரித்துக் கொண்டவர், தனுஷின் அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், அப்படத்தில் சமந்தாவும் ஒரு நாயகி. இதனால், தனது பாத்திரத்தில் கை வைத்து விடுவார்கள் என்பதால், முழுமையாக கதையை படித்துக் காட்டச் சொல்லி, பின்னர் சம்மதம் கொடுத்துள்ளார்.
எனவே, எமி இப்பொழுதெல்லாம் ஏமாறத் தயாரில்லை என்பதும், கவர்ச்சிக்கு மட்டும் நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டேன் எனும் கொள்கையிலும் மிக அவதானமாக உள்ளார் என்பது தெளிவு.
-கோடம்பாக்கக் குருவி-