இளம் வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகி கொலைவெறிப்பாடல்மூலம் வெறித்தனமாக பிரபலமானவர் அனிருத்
அதிகமான புகழ் நிறையவாய்ப்புகள் மூலம் வேகமாக வளர்ந்த இவரோடு சேர்த்து சர்ச்சைகளும் வேகமாக வளர்ந்தது . இதுவரை ஒரு இசையமைப்பாளராகத் தொடர்ந்த அனிருத்துக்கு இப்போது நடிக்கும் ஆசை அதுவும் ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்துவிட்டது .புது முக இயக்குனர் ஒருவரிடம் ஒரு நகைச்சுவை கலந்த கதை ஒன்று கேட்டுவிட்டாராம் . கதை பிடித்துப்போகவே கூடிய விரைவில் ஹீரோவாக நடித்துவிடவேண்டும் என்று உறுதியோடு இருக்கிறாராம் .தன்னுடைய நடிகன் என்ற அடுத்த முகத்தை இவர் எப்படிக்காட்டப்போகிறார் என்பதை அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்