வட இந்தியாவிலிருந்து சென்னை வந்து குடியேறி, இன்று தமிழ் சினி உலகை ஆக்கிரமிக்கும் பட்சிகளின் ஆதிக்கம் அதிகம் எனலாம். அந்தளவுக்கு அவர்களது கொள்ளை கொள்ளும் அழகுதான் இடம் கொடுத்து வைத்துள்ளது.
இந்நிலையில், பல நடிகைகள் தாம் நடிக்கும் படங்களில் தங்களது குரல் மூலமே பின்னணி பேசுவார்கள். சிலர் தமது குரலே தமக்கு எதிரி என்பதால், யாரையாவது வைத்து பேசுங்கள் என்று மௌனிகளாகி விடுவார்கள்.
இப்படி, தமது படங்களில் தாமே சொந்தக் குரலில் பேசி, தேசிய விருதுகளைக் கூட அள்ளி கொண்டவர்களுமுண்டு. இந்நிலையில், நடிகை தமன்னா ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில், தன் குரலிலேயே பேசப் போகிறேன் என இயக்குனரிடம் தனது ஆசையை சொல்லியுள்ளார்.
இயக்குனர் இன்னும் பதில் சொல்லவில்லிய. ஆனாலும் சம்மதிப்பார் என நம்பப்படுகிறது. ஏனெனில், தமன்னா இப்பொழுது இருக்கும் நடிகைகளில் தமிழ் சரளமாக பேசக் கூடியவர் என்பதால் இந்த பின்னணி பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்பது அவரின் எதிர்பார்ப்பு.
-கோடம்பாக்கக் குருவி-