இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகர் மற்றும் கிரிக்கெட் குழுவின் தலைவர் பதவியில் இருந்து அரவிந்த டி சில்வா விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் எதிர்வரும் செம்பியன் கிண்ண தொடருக்காக இலங்கைக்கு பயிற்சியளிக்க தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எலன் டொனால்ட் நியமிக்கப்பட்டமையே அரவிந்தவின் வெளியேற்றத்துக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
எலன் டொனால்ட் இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு தொடர்பில் விசேட பயிற்சியளிக்கவே நியமிக்கப்பட்டிருந்தார்.
அரவிந்தவிடம் ஆலோசிக்காமல் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டதாகவும் , அதுவே அவரின் முடிவுக்கான காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.