அதில் ஈரான் ராணுவ வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஸ்-அல்- அடில் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஈரான் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
தீவிரவாதிகள் கொள்ளைக்காரர்கள். கோழைத் தனமான தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அவர்களை ஒழிக்க வேண்டும் என்று ஈரான் ராணுவ தலைமை தளபதி மேஜர் ஜெனரல் முகமது பக்ரி தெரிவித்தார்.
இதுகுறித்து டி.வி.யில் பேட்டி அளித்தார். அப்போது, “பாகிஸ்தான் எல்லைப்பகுதி தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. அங்கு அவர்கள் முகாம்கள் அமைத்து பயிற்சி பெறுகிறார்கள்.
இதை ஈரான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இந்த நிலை மேலும் தொடரக் கூடாது. பாகிஸ்தான் அதிகாரிகள், தீவிரவாதிகள் எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களை கைது செய்து பயிற்சி முகாம்களை மூட வேண்டும்.
இல்லாவிடில் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை நசுக்குவோம். அழித்து ஒழிப்போம்“ என எச்சரிக்கை விடுத்தார்.
எல்லையில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருப்பது ஈரானுக்கு கடும் தலைவலியாக உள்ளது. அங்கு போதை மருந்து கடத்தல் கும்பல், பிரிவினைவாத தீவிரவாதிகள் என்று தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகிறது.
எனவே ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவீத் ஷரீப் கடந்த வாரம் பாகிஸ்தான் சென்றார். பிரதமர் நவாஸ் செரீப்பை சந்தித்து ஈரான் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி வலியுறுத்தினார்.