மாலபே ரத்னாராம பிரதேசத்தில் வீடொன்றில் இரண்டு சடலங்கள் நிர்வாண நிலையில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் அங்கு ஆண் மற்றும் பெண் ஒருவரின் உடல்கள் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
நீண்ட நேரம் அழைத்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தினால் பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இதன்போது அங்கு ஆண் மற்றும் பெண்ணொருவர் நிர்வாண நிலையில் விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.
அவர்கள் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரும் மற்றும் அவரது மனைவியான ஆசிரியரொருவருமென தெரிவிக்கப்படுகின்றது.
அதில் பெண்ணின் உடலில் உயிர் இருப்பதை அறிந்த பொலிஸார் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
இதனால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இருவருக்கும் பிள்ளைகள் இல்லையெனவும், இருவரும் நீண்டநாட்களாக தனியாக வசித்து வந்த துடன் நோய் வாய்ப்பட்டிருந்த தாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.