திரைப்படத்துறையில் உள்ள மென்மையான மனிதர்களில் இயக்குநர் விக்ரமன் முக்கியமானவர். புதுவசந்தம் படத்தை இயக்கிய பிறகு புகழின் உச்சியில் இருந்தபோதும் பந்தா இல்லாமல் எளிமையாக இருந்தவர்.
அனைவரிடமும் நட்புடனும், மரியாதை உடனும் பழகக்கூடியவர் விக்ரமன்.தற்போது தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். ஆனாலும் அவரது குணம் மாறியதில்லை.
இப்படிப்பட்ட விக்ரமனையே ஒரு கத்துக்குட்டி நிகழ்ச்சித்தொகுப்பாளர் கோபப்பட வைத்துவிட்டார். ராதிகாவின் ராடன் மீடியா தயாரிப்பில் எ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு, கீர்த்திசுரேஷ் நடிக்கும் படம் – இது என்ன மாயம்.
இப் படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட அந்த விழாவில் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் விக்ரமனும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சித்தொகுப்பாளர்களில் ஒருவரான பாலாஜி, விக்ரமனைப் பேச அழைத்தபோது,
”இப்போது டைரக்டர் விக்ரமன் சென்ட்டிமெட்டாக.. நம்மை எல்லாம் கண்கலங்க வைக்கும்படி பேசுவார்” என்று நக்கலாக சொன்னார்,
அதாவது விக்ரமனின் படங்கள் சென்ட்டிமெண்ட்டாக … ரசிகர்களை அழ வைக்கும்படி இருக்கும் என்ற அர்த்தத்தில் கிண்டலாக அவர் குறிப்பிட்டதை விழாவுக்கு வந்தவர்கள் யாரும் ரசிக்கவில்லை.
குறிப்பாக விக்ரமனுக்குப் பிடிக்கவில்லை இது என்ன மாயம் படத்தைப் பற்றி சம்பிரதாயமாக சில வார்த்தைகள் வாழ்த்திப்பேசிவிட்டு பாலாஜியை ஒரு பிடிபிடித்தார்.
“ என் படங்கள் எல்லாமே சென்ட்டிமெண்ட் படங்கள் அல்ல. காமெடிப்படங்களும் எடுத்திருக்கிறேன். இன்னொரு விஷயம்… நான் collegeல் படிக்கும்போது colege செக்ரட்டரியாக இருந்தவன். எனக்கு உங்களைவிட கலாய்க்கத் தெரியும். ஜெண்டில்மேனாக நடித்துக் கொண்டிருக்கிறேன்”
என்று பாலாஜியின் தலையில் ‘ணங்’ என்று விக்ரமன் குட்டு வைத்த பிறகு பாலாஜியின் முகத்தைப் பார்க்கணுமே….
=== CASTRO RAHUL ===