ஆட்களை மாற்றுவதன் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை மாற்ற முடியாது என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
13வது அரசியல் திருத்தத்திற்காக சகல காரணங்களும் ஆராய்ந்து அறிந்து அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடமத்திய மாகாண சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் பின்னர் தீர்மானித்தனர்.
வடமத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம். ரஞ்சித் இதனை குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே, கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, ஆட்களை சேர்ப்பதன் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை கைப்பற்ற முடியாது என குறிப்பிட்டார்.