சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் என்பனவற்றின் விலை அதிகரித்து காணபடுகின்றது.
இந்த நிலையில் அரிசி விலை அதிகரிப்பு தொடர்பாக எமது செய்திச் சேவை மரதகஹாமுல்ல அரிசி விற்பனையாளர் சங்கத்துடன் தொடர்பு கொண்டு வினவியது.
பாரிய நெல் உற்பத்தியாளர்களின் நடவடிக்கைகள் காரணமாகவே அரிசி விலை அதிகரித்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போதைய நிலையில், அரிசிக்கு தட்டுப்பாடு உள்ளதன் காரணமாக அதிக விலைகொடுத்து நெல்லை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை சாதகமாக, பாரிய நெல் உற்பத்தியாளர்கள் பயன்படுத்துவதனாலேயே தொடர்ந்தும் அரிசியின் விலை அதிகரித்த நிலையில் காணப்படுவதாக மரதகஹாமுல்ல அரிசி விற்பனையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தேங்காய் விலை அதிகரிப்பு குறித்து எமது செய்தி சேவை சிலாபம் தேங்காய் தொழிற்துறை சம்மேளத்தின் தலைவர் ஆசிரி ஹேரத்திடம் வினவியது.
பொதுவாக ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் தேங்காய்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவது வீழ்ச்சி ஏற்படுவது வழமை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.