யாருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு எதிராகப் போராட தான் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை என கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி கர்பலா நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே கிழக்கு முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கர்பலா நகர் மக்கள் 15 வருடத்துக்கும் மேலாக வாழ்ந்து வந்த காணிகள் சிலரால் முறைகேடான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த மக்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு முதலமைச்சர் மக்களிடம் உறுதியளித்தார்.