கல்கிஸ்சையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
வட்டரப்பல பகுதியிலேயே மேற்படி மசாஜ் நிலையம் இயங்கி வந்துள்ளது.
மேற்படி சுற்றிவளைப்பின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு முகாமையாளராக செயற்பட்ட ஒருவரும் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும் அவிசாவளை மற்றும் திவுலதெனிய பிரதேசத்தை சேர்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்சிஸ்சை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.