கணவனால் தீ வைத்து கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 18 வயதான பாதிமா சர்மிளா என்ற பெண்ணுக்கு நீதிகோரி புத்தளத்தில் நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமீம் பாத்திமா சர்மிளா என்ற குறித்த பெண், கதிரையில் வைத்து கட்டப்பட்டு , பின்னர் தீ வைத்து கொழுத்தப்பட்டிருந்தார். சம்பவம் நடந்து சில நாட்களின் பின் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது கணவரே இக்கொடூரத்தை அரங்கேற்றியிருந்தமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தனது 16 வயது திருமணம் செய்துகொண்ட அவர் 7 மாத குழந்தையொன்றின் தாயாவார். மேலும் அவர் உயிரிழக்கும் போது அவர் 4 மாத கர்பிணி எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
இலங்கை மிகவும் பாரதூரமான ஒரு குடும்ப வன்முறையாக சமூக ஆர்வலர்கள் இச்சம்பவத்தை சுட்டிக்காட்டியிருந்தனர்.
இச்சம்பவத்தை நடத்தியதாக கூறப்படும் அவரது கணவர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை இதுவரை பொலிஸாரால் பிடிக்க முடியாமல் போயுள்ளது.
பொலிஸாரின் செயற்பாடுகள் மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, அப்பாவிப் பெண்ணான பாத்திமா சர்மிளாவுக்கு நீதி கோரி புத்தளத்தில் அமைதியான முறையில் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆண் - பெண், இன- மத பாகுபாடின்றி பலர் இதில் கலந்துகொண்டிருந்த துடன், கொலைக்கு நீதி கோரியிருந்தனர்.