பூனேயை சேர்ந்த சாகர் கிருஷ்ணா என்பவர், பாடசாலை மாணவி மலர்விழியிடம் Face Book மூலம் நண்பராகியுள்ளார். நாளுக்கு நாள் இவ்விருவரின் நட்பு நெருக்கமாகியுள்ளது.
பின்னர் இருவரும் சந்தித்து தமது நட்பை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், சாகர் கிருஸ்ணாவும் மலர்விழியும் சந்தித்த போது, சாகர் கிருஷ்ணா குடிபானத்தில் மயக்க மருந்தை கலந்து மலர்விழிக்கு கொடுத்துள்ளார்.
குடிபானத்தை பருகிய சில மணிநேரத்திற்குள், மாணவி மயக்க நிலைக்கு வந்ததும், சாகர் கிருஷ்ணா அவரை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை இந்திய காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.