இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய தொலைக்காட்சி ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது.
இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது.
அதில், ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த விமானம் வெடித்து சிதறியதில் அவர் உள்பட 7 பேர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தது.
ஆனால் தான் நலமுடன் மும்பையில் இருப்பதாக டுவிட்டரில் ஷாருக்கான் தன்னுடைய புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் மேலும் கூறுகையில், விமான விபத்து புரளி மற்றும் சினிமா படப்பிடிப்பு அரங்கம் இடிந்து விழுந்த சம்பவம் ஆகியவற்றால் இந்த வாரம் எனக்கு மறக்க முடியாத வாரமாகி விட்டது என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்துக்காக போடப்பட்ட அரங்கம் திடீரென இடிந்து விழுந்ததில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.