இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பெண் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லையே தற்கொலைக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
காவல் நிலையத்தில் வைத்தே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லூதியானா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த அவருக்கு, அவரது சக காவலர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டை அவரது உறவினர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் உத்தியோகத்தருக்கே இந்த நிலையா என பலரையும் கேள்வி எழுப்பச் செய்துள்ளது இச்சம்பவம்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.