நேற்று மாலை 6.15 மணியளவில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.
கொழும்பிலிருந்து, காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே சகோதரர்கள் உயிரிழந்திருந்தனர்.
25 வயதான ச சீ மதுஷான் ரணவீர மற்றும் 12 வயதான லக்ஷான் ரணவீர ஆகியோரே உயிரிழந்த சகோதர் கள் ஆவர்.
இவர்கள் அனுராதபுரம், புதிய நகரைச் சேர்ந்தவர்கள்
இதில் ச சீ நேற்றே சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
அவரை அழைத்து வர அவரது குடும்பத்தாரும் , கட்டுநாயக்க விமானநிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அனைவரும் காலி முகத்திடலுக்குச் சென்று ,உல்லாசமாக பொழுதைக் கழித்துள்ளனர். பின்னரே அவர்கள் கொள்ளுப்பிட்டி பிரதேச த்துக்குச் சென்றுள்ளனர்.
இதன் போதே இச்சோகம் நிகழ்ந்துள்ளது. செல்பி எடுக்க முற்பட்ட வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.