Bogawanthalawa pregnant lady abuse by mother in law - கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்து வரும் கொடுமை: வெளிவந்த உண்மைச் சம்பவம் (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
17,071 Views
பொகவந்தலாவை பிரதேசத்தில் நான்கு மாத கர்ப்பிணி தாயொருவரை அவரது மாமியார் தீயில் சுட்டு கொடுமைபடுத்தி வந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொகவந்தலாவை - பெட்ரோசோ தோட்டத்தின் பீடிலன் பிரிவை சேர்ந்த லெச்சமன் விஜேமணி என்ற 22 வயதுடைய குறித்த கர்ப்பிணிப் பெண் பொகவந்தலாவை சுகாதார மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைகளுக்காக வந்துள்ளார்.
இதன் போது குறித்த கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் தீக் காயங்கள் இருப்பதை அவதானித்த சுகாதார மருத்துவ அதிகாரி இது தொடர்பில் குறித்த பெண்ணிடம் வினவியுள்ளார்.
தனது மாமியார் தன்னை கொடுமைபடுத்துவதாகவும் , அவர் நெருப்புக் கட்டையால் தன்னை இவ்வாறு தீக்காயங்களுக்கு உட்படுத்தியதாகவும் குறித்த பெண் சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உடன் செயற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி , குறித்த பெண்ணை பொகவந்தலாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் , குறித்த பெண்ணின் மாமியாருக்கு எதிராக பொகவந்தலாவை காவற்துறையில் முறைப்பாடொன்றை பதிவு செய்தார்.
கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட குறித்த பெண்ணிற்கு தற்போது ஒரு குழந்தையுள்ள நிலையில் அவர் கர்ப்பமாக இருந்த காலத்தில் அவரது மாமியார் தாக்கியதில் ஒரு முறை கர்ப்பம் கலைந்துள்ளதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , தனது கணவரையும் அவரது தாய் தாக்குவதால் , தனக்கு மேற்கொள்ளப்படும் கொடுமைகளை தனது கணவர் தட்டிக் கேட்பதில்லை என லெச்சமன் விஜேமணி தெரிவித்துள்ளார்.