மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளத்தின் முன்னணி நடிகனாக விளங்குகிறார் தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார் இவர் சினிமா துறைக்கு வர முதலே திருமணமானவர் என்பது எத்தனைபேருக்கு தெரியும்?
திருமணம் முடிப்பதட்கான காரணம் இவர் சினி துறைக்கு வருவதற்காகத்தானம் என்னடா இது அனைவரும் சினிமா துறையில் சாதித்து பணம் புகழ் சம்பாதித்த பின்னே திருமணம் செய்ய விரும்புவார்கள் ஆனால் இவர் கதையோ வித்தியாசமாகவுள்ளது.
துல்கர் சல்மான் நடிகனாக வர விரும்பியதுமே அவருடைய தந்தை மம்முட்டி துல்கருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தாராம் காரணம் மலையாள திரைப்பட உலகின் மெகா ஸ்டாரான மம்முட்டி திருமணம் முடித்த பின்னரே நடிப்புலகிற்கு வந்துள்ளார் அதனால்தான் தன்னால் சாதிக்கமுடிந்தது என நம்பும் அவர் தன் மகனுக்கும் அதே அறிவுரை வழங்கியுள்ளார்
அதுமட்டுமல்லாது திருமணம் முடித்தபின் சினி துறைக்கு வரும்போது பொறுப்போடு நடந்துகொள்வார்கள் எனவும் கூறியுள்ளார். துல்கர் சல்மான் திருமணம் முடித்து ஒரு வருடத்திற்கு பின்பே நடிக்க வந்துள்ளார் அதனால்தான் அவர் தேர்ந்தெடுக்கும் படங்களிலும் நடிப்பிலும் நேர்த்தி காணப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.