ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றதன் பலாபலனை சிதைப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத எதிர்பார்ப்புகளை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை ஊடாக அரசாங்கம் முன்வைக்கக்கூடாது என்று மகிந்த ராஜபக்ஷ கூறி இருந்தார்.
இலங்கையானது, விரைவில் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாறவுள்ள நிலையில், அதன் பின்னர் இந்த வரிச்சலுகை இல்லாது செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதனை மறுத்துள்ள அமைச்சர் மங்களசமரவீர, குறித்த வரிச்சலுகை தொடர்சியாக 3 வருடங்களுக்கு வழங்கப்படும் என்பதோடு, அதில் இருந்து விலகுவது குறித்த தீர்மானத்தை மேற்கொள்ள மேலும் ஒரு வருட அவகாசம் வழங்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.