எகிப்தில் சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் மூலம் அரசு வழக்கறிஞரை கொலை செய்த குற்றத்திற்காக 31 பேருக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்திய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு சிரேஸ்ட அரசு வழக்கறிஞராக பணியாற்றிய ஹிஷாம் பராகத் என்பவர் சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.
அவர் பயணித்த சிற்றூர்ந்து ஒன்றுடன் எதிரே வந்த சிற்றூர்ந்து ஒன்றை மோத செய்து இந்த குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பாக தீவிரவாத குழுவைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணையின் போதே, குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 31 பேருக்கு எதிராக இந்த மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கான தண்டனை அடுத்த மாதம் 22ம் திகதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.