வட கொரியாவால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஓட்டோ வாம்பையர், மரணமடைந்தார்.
அமெரிக்காவின் வர்ஜீனியா பல்கலைக்கழக மாணவர், ஓட்டோ வாம்பையர். இவருக்கு வயது 22. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வட கொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது, அந்த நாட்டு உணவகம் ஒன்றிலிருந்து அரசின் பிரசார சுவரொட்டியைத் திருட முயன்றதாக, அவர் மீது குற்றம் சாட்டி, சிறையில் அடைத்தது வட கொரிய அரசு. அவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதால், கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.
வட கொரியாவிலிருந்து விடுவிக்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில், அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவந்த ஓட்டோ வாம்பையர், இன்று மரணமடைந்தார். ஓட்டோவின் இந்த நிலைக்கு, வட கொரிய அரசு செய்த சித்ரவதைகள்தான் காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வட கொரியா அரசு, ஓட்டோவை சிறையில் வைத்து சித்ரவதை செய்துள்ளது. அங்கு, மிருகத்தனமான கிம் ஆட்சி நடைபெறுகிறது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.