பங்களாதேஷில் பாரவூர்தி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 தொழிலாளிகள் பலியாகினர்.
சீமெந்து ஏற்றி சென்ற பாரவூர்தி ஒன்றே இன்று இவ்வாறு விபத்துக்குள்ளானது.
ரமழான் பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்களே இந்த சம்பவத்தில் பலியானதாக பங்களாதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களுள் 4 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.