நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்போஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் சர்ச்சைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.ஜல்லிக்கட்டு புகழ் ஜூலியால் பல பரபரப்புகள்பிக்போஸ் நிகழ்ச்சியில் நடந்தது. இந்நிலையில் விஜய் டிவியால் இந்த நிகழ்ச்சியின் புரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.
இந்த புரோமோவில் நடிகர் வையாபுரி கதறி கதறி அழுவதை பார்க்க முடிகிறது. அவரை அருகில் இருந்து ஜூலி தேற்றுகிறார். வையாபுரி அழுவதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.
ஆனால் அதே காணொளியில் நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், இதுக்குத்தான் இந்த மாதிரி எச்சைங்களோட நான் வர மாட்டேன்னு சொன்னேன். நான் முன்கூட்டியே சொன்னேன். எனக்கு யார் அவங்க என கூறுகிறார்.
காயத்ரி ரகுராம் இப்படி பேசியது தான் நடிகர் வையாபுரி கதறி அழுவதற்கு காரணமா என சமூக வலைதளங்கில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அதே நேரம்தரவரிசையில் முதலிடம் பெறத்தான் விஜய் தொலைக்காட்சியே இப்படி செய்ய வைக்கிறதா என்ற பேச்சுக்களும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.