சமீபத்தில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகிய சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பல்சர் சுனில் கைது செய்யப்பட்டார். அப்போது சிக்க சில ஆதாரங்களால் நடிகர் திலீப்பிடம் தீவிர விசாரணை 13 மணி நேரமாக நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் திலீப்பின் இரண்டாம் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான ஆன்லைன் ஆடை நிறுவனம் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனால் போலீசார் அந்த ஆடை நிறுவனத்தில் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது, இந்த விசாரணையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.