அட்சய திருதியை நாளில் என்ன பொருள் வாங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்று லட்சுமி தந்திரம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
தங்கம்: கடன் தொல்லை தீரும். குடும்பம் தன்னிறைவும் சுபீட்சமும் பெற வழி உண்டாகும்.
வெள்ளி: உடல் நலம் அதிகரிக்கும். நீண்ட நாள் நோயில் இருந்து விடுபடலாம். இதனால் மன அமைதி ஏற்படும்.
அரிசி: நம்மிடம் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழை-எளியவர்களுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவம் வரும்.
நெய்: குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
வெண்ணை - நினைவுத்திறன் மேம்படும்.
வெள்ளை சட்டை: மனதில் குதூகலம் பிறக்கும். உப்பு: வீட்டுக்கு தேவையான சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
சர்க்கரை: கணவன்-மனைவி பாசம் அதிகரிக்கும்.
பருப்பு: குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பெண்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.
பூக்கள்: குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
மின்சாதன பொருட்கள்: குறுகிய காலத்தில் ஏழ்மை விலகும்.
தானத்துக்குரிய பொருட்கள்: குடும்பத்தில் என்றுமே உணவு பஞ்சம் வராது.
நன்றி :மாலைமலர்