பதுளை - ஹலிஎல பிரதேசத்தில் ஒரு நாள் விடுதியொன்றை சுற்றிவளைத்து அங்கிருந்த 29 இளைஞர், யுவதிகளை காவற்துறை கைது செய்துள்ளது.
நேற்று இந்த கைது இடம்பெற்றுள்ளது.
அவர்களிடமிருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான போதை மருந்துகள் மற்றும் ஹேரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
பேஸ்புக் ஊடாக ஒன்று சேர்ந்துள்ள இந்த தரப்பினரில் மேலதிக வகுப்பிற்கு சென்றுள்ள மாணவ மாணவிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த ஒருநாள் விடுதிக்குள் நுழைவதற்கு ரூபாய் ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை அறவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.