சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகளும், 'விஐபி 2' திரைப்படத்தின் இயக்குனருமான சௌந்தர்யாவுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.
கணவர் அஸ்வினுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சௌந்தர்யா பிரிய முடிவு செய்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவின் விசாரணை, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி சௌந்தர்யா, அஸ்வின் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 4ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சௌந்தர்யா - அஸ்வின் தம்பதியருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.