சினிமாவை தொழிலாக கொண்ட நடிகர் அஜீத் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் ஒரே நபர் வில்லனாகியுள்ளார்.
இது நிஜத்தில் அல்ல திரைப்படத்தில்...
அஜீத், ஆர்யா, நயன்தாரா நடித்த 'ஆரம்பம்' திரைப்படத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதியாக நடித்த மகேஷ் மஞ்ச்ரேக்கரை யாரும் மறந்திருக்க முடியாது.
இந்த நிலையில், நான்கு வருடங்களுக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'வேலைக்காரன்' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தில் மகேஷ் மஞ்ச்ரேக்கர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக நடித்து வருவதாகவும், இந்த கேரக்டருக்கு அவருடைய தோற்றம் கச்சிதமாக பொருந்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பகத் பாசிலுடன் இவருக்கு உள்ள தொடர்பு குறித்து ஒரு டுவிஸ்ட் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
'ஆரம்பம்' படத்திற்கு பின்னர் மீண்டும் நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தில் மகேஷ் மஞ்ச்ரேக்கர் நடிக்கின்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.