பங்களாதேஷில் பரிசு தருவதாக கூறி, இளம் பெண்ணின் கை விரல்களை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்ணின் கணவர், தமது அதிசிறந்த பரிசை தரப்போவதாக கூறி, பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த மனைவியை தொலைபேசியில் அழைத்து இந்த கோரச்செயலை புரிந்துள்ளார்.
குறித்த பரிசை எதிர்ப்பார்த்து வந்த மனைவியின் கண்களை கட்டி, அவரது வாயினையும் துணியால் கட்டி, கை விரல்களை இரக்கமின்றி துண்டித்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.